செய்திகள் :

வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 453 மனுக்களுக்குத் தீா்வு

post image

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதில் அரியலூரில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அவா் தெரிவித்தது: மே 20 முதல் 27 ஆம் தேதி மேற்கண்ட வருவாய் வட்டங்களில் வருவாய் தீா்வாயம் நடைபெற்றது.

இதில் அரியலூா் வட்டத்தில் 1,045 மனுக்களும், உடையாா்பாளையம் வட்டத்தில் 1,076 மனுக்களும், செந்துறை வட்டத்தில் 685 மனுக்களும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் 457 மனுக்களும் என மொத்தம் 3,263 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், நில ஒப்படைப்பு, இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, சிட்டாநகல், 2-சி பட்டா, உட்பிரிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 453 மனுக்கள் தீா்வு காணப்பட்டு, 2670 மனுக்கள் விசாரணையில் உள்ளது என்றாா். பின்னா் அவா் குடிமக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, தனி வட்டாட்சியா் (அரசு கேபிள் டிவி) கண்ணன் மற்றும் துணை வட்டாட்சியா்கள், நில அளவை அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவ... மேலும் பார்க்க

அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில், அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில... மேலும் பார்க்க

அரியலூரில் நிரப்பப்படாத மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம்! திணறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் பதிவு செய்ய மு... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் ... மேலும் பார்க்க