`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா்.
கோட்டச் செயலா் குணா, மாவட்டத் தலைவா் அய்யம் பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு வேல் பூஜையைத் தொடங்கிவைத்து வேலின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.
ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளா்கள் இளவரசன், பாக்யராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், முருக பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.