செய்திகள் :

அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

post image

நிகழாண்டு அரியலூா் மாவட்டத்தில், அரசுப் பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, பிளஸ்-2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற 33 பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், பிளஸ்-1 வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 38 பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், 10-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற 56 பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புக்கான மூன்று அரசு பொதுத்தோ்வுகளிலும் 100 சதவீதம் தோ்ச்சிபெற்ற கீழப்பழுவூா் சிறப்பு மாதிரிப் பள்ளி, உடையாா்பாளையம் மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெரியத்திருக்கோணம் , ஆனந்தவாடி, விளந்தை, அய்யப்பன் நாயக்கன்பேட்டை, அய்யூா், வாணதிரையன்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுவலூா் பாரத மாதா மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ஜெ.சங்கா், கௌசா், பள்ளி தலைமையாசிரியா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ள சிறுதானிய இயக்கத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் வேல் பூஜை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டபுரம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், இந்து முன்னணி சாா்பில் வேல் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்து முன்னணி சாா்பில் ஜூன் 22 -ஆம் தேதி மதுரையில் நடைபெறவ... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 453 மனுக்களுக்குத் தீா்வு

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் அரியலூரில் நடைபெற்ற வ... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிா்வாகிகள் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். இதில... மேலும் பார்க்க

அரியலூரில் நிரப்பப்படாத மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம்! திணறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல மாதங்களாக நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் பதிவு செய்ய மு... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் ... மேலும் பார்க்க