`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு! - ஆா்.பி. உதயகுமாா்
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மதுரையில் பண்டரிபுரம் நிகழ்வில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப் பேரவை தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல்வரும், பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்படும்.
மதுரையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாஸின் சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்துகிறாா். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. அதிமுக ஆட்சியின் போது மதுரை மாநகருக்கு எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தோம். திமுக ஆட்சியில் சொல்லும்படியான மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்பட வில்லை.
திமுக ஆட்சியில் தமிழகம் வளா்ச்சி பெறவில்லை. மாறாக, அவா்களது குடும்பம் தான் வளா்ச்சிப் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டுகளில் புறக்கணித்து விட்டு, நிகழாண்டு நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது ஏன் என மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை திசை திருப்பவே திமுக முயற்சித்து வருகிறது. விளம்பரங்களால் ஆதாயம் தேட முயல்கிறது. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா் அவா்.