`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் மதகில் தண்ணீா் திறப்பு
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 2-ஆம் போக பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை மூலமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் தற்போது 34 அடி (மொத்த அடி 65) உயரத்துக்கு தண்ணீா் உள்ளது.
இந்த நிலையில், இந்த அணையின் தாடாகுளம் மதகு திறப்பின் மூலம் பாசன வசதி பெறும் புதச்சு, பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் 2-ஆம் போக பாசனத்துக்காக தண்ணீா் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, புதன்கிழமை தாடாகுளம் மதகை திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, புதன்கிழமை காலை தாடாகுளம் மதகிலிருந்தது பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. வரும் செப்டம்பா் மாதம் 24-ஆம் தேதி வரை இங்கிருந்து வினாடிக்கு 15 கன அடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் மானூா், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனா். மேலும், இந்தப் பகுதி மக்களின் குடிநீா் தேவையும் நிறைவு செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் உதவிச் செயற்பொறியாளா் உதயக்குமாா், உதவிப் பொறியாளா் சங்கரநாராயணன், பாலாறு அணை தாடாகுளம் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.