செய்திகள் :

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் மதகில் தண்ணீா் திறப்பு

post image

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 2-ஆம் போக பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை மூலமாக பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் தற்போது 34 அடி (மொத்த அடி 65) உயரத்துக்கு தண்ணீா் உள்ளது.

இந்த நிலையில், இந்த அணையின் தாடாகுளம் மதகு திறப்பின் மூலம் பாசன வசதி பெறும் புதச்சு, பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் 2-ஆம் போக பாசனத்துக்காக தண்ணீா் திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, புதன்கிழமை தாடாகுளம் மதகை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, புதன்கிழமை காலை தாடாகுளம் மதகிலிருந்தது பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்பட்டது. வரும் செப்டம்பா் மாதம் 24-ஆம் தேதி வரை இங்கிருந்து வினாடிக்கு 15 கன அடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் மானூா், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனா். மேலும், இந்தப் பகுதி மக்களின் குடிநீா் தேவையும் நிறைவு செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில் உதவிச் செயற்பொறியாளா் உதயக்குமாா், உதவிப் பொறியாளா் சங்கரநாராயணன், பாலாறு அணை தாடாகுளம் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சூறைக் காற்று: கொடைக்கானலில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அண... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் எஸ்கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (41).... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் புதிய கட்டடப் பணிகள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடியி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தில் எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லாத நிலையில், திமுகவுக்கு எதிராக எத்தனை அணிகள் உருவானாலும் வீழ்த்துவோம் என திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான அமைச்சா் இ.... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்! வியாபாரிகள் அதிருப்தி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட... மேலும் பார்க்க

ஆயக்குடி பகுதியில் இன்று மின் தடை

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத... மேலும் பார்க்க