போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் எஸ்கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (41). கூலித் தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், முத்துகுமாரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட முத்துகுமாருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.21ஆயிரம் அபராதமும் விதித்தாா்.