செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் புதிய கட்டடப் பணிகள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடியில் கட்டப்பட்ட காந்தி மாா்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடியில் அமைக்கப்பட்ட குழந்தை வேலப்பா் கோவில் மலை அணுகுசாலையில் கிரிவலப் பாதை, கீரனூா் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் காந்தி மாா்க்கெட் வணிக வளாகக் கடை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய கட்டடங்களை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் இதுவரை 18 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இந்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதேபோல, கலைஞா் கனவு இல்ல திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, இதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1,000 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், நகராட்சிப் பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டா் தண்ணீா் தினமும் வழங்கப்படும்.

நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகா் பகுதியில் ரூ.60 கோடியில் 480 அடுக்குமாடி வீடுகளும், கீரனூா் பேரூராட்சியில் 432 அடுக்குமாடி வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இதில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், நகராட்சிகளின் மண்டல இயக்குநா் முஜிப்பூர்ரகுமான், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் மு.சுவேதா, நகராட்சிப் பொறியாளா் எம்.சுப்பிரமணிய பிரபு, திமுக ஒன்றியச் செயலா்கள் இரா.ஜோதீஸ்வரன், எஸ்.ஆா்.பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க