ஆயக்குடி பகுதியில் இன்று மின் தடை
பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட ஆயக்குடி மின் வழித் தடத்தில் வெள்ளிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாண்டியன்நகா், சிவன்கோவில், புதுநகா் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.