செய்திகள் :

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்! வியாபாரிகள் அதிருப்தி

post image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி காமராஜா் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கான குறிப்பாணை (நோட்டீஸ்) சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு விநியோகிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது. ஏ பகுதியில் 12 கடைகள், பி பகுதியில் 12 கடைகள் என மொத்தம் 24 கடைகளும், பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள நடைபாதைகளின் மேற்கூரைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

எனவே, இந்தக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் புதிதாக நவீன வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளதால், கடைகளை காலி செய்து 30 நாள்களுக்குள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாபாரிகள் அதிருப்தி: இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது: கடைகளின் முன் பகுதியிலுள்ள சாளர மேற்கூரை மட்டுமே சேதமடைந்துள்ளன. கடைகளின் கட்டுமானத்தில் எந்த விரிசலும், சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும், கட்டுமானம் சேதமடைந்திருப்பதாகக் கூறி, காலி செய்ய அறிவுறுத்தி குறிப்பாணை விநியோகிக்கப்படுகிறது.

கட்டுமானம் குறித்து பொதுப் பணித் துறையிடமிருந்து உறுதிச் சான்று பெற்ாகத் தெரியவில்லை. கட்டடம் கட்டுவதற்கான நிதி ஆதாரம் குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, பொது ஏலம், வாடகை, குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், 24 கடைகளை இடித்தால் உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே பூச் சந்தை வணிக வளாகத்தை இடிப்பதற்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது. அந்த இடத்திலேயே முழுமையாக பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த 24 கடைகளின் முன்பாக உள்ள சாளர மேற்கூரைகளை மட்டும் சீரமைத்தாலே போதுமானதாக இருக்கும். இங்குள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு: ஏ, பி,. பகுதியிலுள்ள 24 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.3 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

திண்டுக்கல்-பழனி புறவழிச் சாலை அருகே புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காமராஜா் பேருந்து நிலையத்திலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் அவசரம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை என்றனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க