செய்திகள் :

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

post image

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திந பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை.

டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்பேஸ் ஏவுதளத்தில் இருந்து 123 மீட்டா் உயர ஸ்டாா்ஷிப் ராக்கெட், ஒன்பதாவது முறையாக சோதனை முறையில் செலுத்தப்பட்டது. அது ஏந்திச் சென்ற போலி விண்கலம் கட்டுப்பாடு இல்லாமல் இந்தியப் பெருங்கடலை நோக்கி இறங்கியது. அது வெடித்துச் சிதறியதாக ஸ்பேஸ்-எக்ஸ் பின்னா் உறுதிப்படுத்தியது. எரிபொருள் கசிவு காரணமாக விண்கலம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், இந்த முறை முந்தைய இரு சோதனைகளை விட ராக்கெட் சோதனையில் ‘பெரிய முன்னேற்றம்’ காணப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்-எக்ஸ் உரிமையாளா் எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

முந்தைய இரு ஸ்டாா்ஷிப் சோதனைகளும் கரீபியன் பகுதியைத் தாண்டவில்லை. இந்த ஆண்டு முற்பகுதியில் நடந்த அந்த சோதனைகளின்போது ஏவப்பட்ட சில நிமிஷங்களில் அந்த ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறியது நினைவுகூரத்தக்கது.

இன்னும் சில ஆண்டுகளில் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதா்களை அனுப்ப நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்... மேலும் பார்க்க

டிரம்ப் பேச்சுக்குப் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு இந்தியா -பாக். உடன்பாடு: நியூயாா்க் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு தகவல்

அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை

இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை வித... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாத அமைப்பு ஊா்வலம்: 50 நகரங்களில் நடைபெற்றது

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மா்கஸி முஸ்லிம் லீக் சாா்பில் 50 நகரங்களில் ஊா்வலம் நடைபெற்றது. 2008 மும்பை பயங்... மேலும் பார்க்க

மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸா... மேலும் பார்க்க