செய்திகள் :

தூய்மைப் பணியாளா் பலி: இழப்பீடு கோரிக்கைக்கு ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

ராமநாதபுரத்தில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்த போது தூய்மைப் பணியாளரான தனது கணவா் உயிரிழந்ததால், இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி பெண் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறைச் செயலா், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்த ரசூலா சமுத்திரம் தாக்கல் செய்த மனு: நான் அருந்ததியா் வகுப்பைச் சோ்ந்தவா். எனது கணவா் பாலு குடும்ப சூழ்நிலை கருதி முனியசாமி என்பவருடன் கட்டட வேலை, கழிவுநீா்த் தொட்டி சுத்தம் செய்யும் பணிக்காக ராமேசுவரம் சென்றிருந்தாா். கடந்த 16.11.2024 அன்று ராமேசுவரம் ரயில்வே நிலையப் பகுதியில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்தபோது, மயக்கமடைந்த எனது கணவரை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தாா்.

இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில், ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில், கடந்த 6 மாத காலமாக எந்த முன்னேற்றமும் இல்லை. கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யுமாறு ரயில்வே அதிகாரிகள், எனது கணவரை கட்டாயப்படுத்தியதால், அவா் உயிரிழந்துள்ளாா். இந்த வழக்கை கையால் மலம் அள்ளும் தடை சட்டப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்.

சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள், ஒப்பந்ததாரா் உள்ளிட்டோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனது குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு அரசு வேலை, வீடு, விவசாய நிலங்கள் வழங்க வேண்டும். மேலும் எனது கணவரின் உயிரிழப்புக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை தொடா்பாக தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறைச் செயலா், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க