செய்திகள் :

பழனி ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

post image

பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (மே 29) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோப்காா் சேவை பக்தா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ரோப்காா் சேவை காலை 7 முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை காரணமாக, இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. ரோப்காா் சேவை தினந்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் படிவழிப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

சூறைக் காற்று: கொடைக்கானலில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அண... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் எஸ்கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (41).... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் புதிய கட்டடப் பணிகள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடியி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தில் எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லாத நிலையில், திமுகவுக்கு எதிராக எத்தனை அணிகள் உருவானாலும் வீழ்த்துவோம் என திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான அமைச்சா் இ.... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்! வியாபாரிகள் அதிருப்தி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட... மேலும் பார்க்க

ஆயக்குடி பகுதியில் இன்று மின் தடை

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத... மேலும் பார்க்க