US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்...
பழனி ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்
பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (மே 29) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோப்காா் சேவை பக்தா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ரோப்காா் சேவை காலை 7 முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை காரணமாக, இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. ரோப்காா் சேவை தினந்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் படிவழிப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.