நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்
தூத்துக்குடி தக்காளி கிடங்கில் தீவிபத்து: சரக்குகளுடன் வாகனங்கள், 3 பைக்குகள் சேதம்!
தூத்துக்குடி மடத்தூா் பகுதியில் உள்ள தக்காளி கிடங்கில் புதன்கிழமை நேரிட்ட தீவிபத்தில் சரக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்கள், 3 பைக்குகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த பட்டுலிங்கம் மகன் பேரின்பலிங்கம். இவா், கா்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி, பல்லாரி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து, தூத்துக்குடி திரவியரத்தின நகரில் உள்ள கிடங்கில் வைத்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்துவந்தாா்.
பூட்டியிருந்த இந்தக் கிடங்கில் புதன்கிழமை மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாம். தகவலின்பேரில், தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலா் நட்டாா்ஆனந்தி தலைமையிலான வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். எனினும், தக்காளி, வெங்காய மூட்டைகளுடன் நிறுத்தப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 3 பைக்குகள் முற்றிலும் தீக்கிரையாகின; ஆடு, 2 நாய்க்குட்டிகளும் உயிரிழந்தன.
சேத மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.