செய்திகள் :

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

post image

பி.சி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள பி.சி.என். கண்டிகை கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததி காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீா் பைப் லைன்கள் சேதம் அடைந்து, மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் சரிவர செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா், மேட்டு குன்னத்தூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்தை பி. சி. என். கண்டிகை கிராமத்தில் சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த திருத்தணி எஸ்.ஐ. குணசேகரன் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினாா். பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு குடிநீா் பிரச்னை சரி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும்

கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க