செய்திகள் :

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, சுருளிமலை, மகாராஜாமெட்டு உள்ளிட்ட காப்புக் காடுகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கம்பம் அருகேள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்குச் செல்லவே, குளிக்கவோ கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது. கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க