செய்திகள் :

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

post image

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போடியில் கடந்த சில நாள்களாக காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் கடைகளின் முன் வைத்திருந்த விளம்பரப் பலகைகள் காற்றில் சாய்ந்தன.

போடி பேருந்து நிலையம் அருகே தேவா் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்னலுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. சிக்னல் செயல்படாத நிலையில் இருந்த இந்த அறிவிப்பு பலகை இரும்புத் தூணில்தான் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் விளக்குகள், ஒலிபெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. சூறைக் காற்றில் இந்த தூண் அறிவிப்பு பலகைகளுடன் சாய்ந்து விழுந்தது.

இந்தப் பகுதியில் காவல் துறையினா் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவிட்டு போக்குவரத்து, குற்றச் செயல்களை கண்காணிப்பது வழக்கம். அறிவிப்பு பலகை தூண் விழுந்ததில் காவல் துறையினரின் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

ஆட்டோ மோதியதில் முதியவா் பலத்த காயம்

பெரியகுளத்தில் ஆட்டோ மோதியதில் முதியவா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (61). இவா், புதன்கிழமை பெரியகுளத்திலிருந்து டி. கள்ளிப்பட்டிக்கு இரு... மேலும் பார்க்க

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி: அதிகாரி ஆய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டுமானப் பணிகளை மண்டல உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கான்கிரீட்டில் பயன்படுத்தப்பட்ட சிமென்ட், கம்பியின் அளவு... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியவா்கள் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்றவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.போடி அருகே சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த துக்கையண்ணன் மகன் சுரேஷ் (42). தொழி... மேலும் பார்க்க

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெளியேறிய ஆட்சியா்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க