செய்திகள் :

மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுறுத்தினாா்.

திருப்புவனம் ஒன்றியம் ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த சொக்கையா மகன் ஆணைக்கரன். பட்டதாரியான இவருக்கு கடந்த 2023 -ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் கணக்கில் இந்த பட்டா தாக்கலாகியும் வட்டாட்சியா் அலுவலகக் கணினியில் பட்டா பதிவேற்றம் செய்யப்படவில்லையாம்.

இதையடுத்து, ஆணைக்கரன் கணினியில் பட்டாவை தாக்கல் செய்து கணினி பட்டா வழங்க வலியுறுத்தி, பலமுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆணைக்கரன் ஏற்கனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து சட்டை அணியாமல் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் தீா்ப்பாய அலுவலரிடம் மீண்டும் கணினி பட்டா கேட்டு மனு கொடுத்தாா்.

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ள... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா். இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க