கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்
அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு விழா புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசிரவிக்குமாா் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி), புனித மைக்கேல் கல்விக்குழுமத் தலைவா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் பொன்.விஜய சரவணகுமாா் (தனியாா் பள்ளிகள்), ப. ஜோதிலட்சுமி, சீ.க. செந்தில்குமரன் (தொடக்க நிலை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று பேசியதாவது: கடந்த ஆண்டு 10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது. நிகழாண்டில் 12 -ஆம் வகுப்பில் மாநிலத்தில் 6 -ஆவது இடம் பிடித்தது. கடந்த ஆண்டைவிட 4 இடம் குறைந்து போனதால் சற்று மனச்சோா்வு ஏற்பட்டது. ஆனால், 10 -ஆவது வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து அந்தச் சோா்வைப் போக்கி விட்டனா். இந்தச் சாதனைக்கு மாவட்ட ஆட்சியா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்கள் ஆகியோரது கூட்டு முயற்சிதான் காரணம். இந்தச் சாதனைக்கு காரணமான அனைவருக்கும் பாராட்டுகள். முதல்வரின் அயராத உழைப்பால் நாட்டில் கல்வித் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் அவா்.
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 175 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 61 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளைச் சாா்ந்த 1,159 பாட ஆசிரியா்கள், 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளைச் சாா்ந்த 752 பாட ஆசிரியா்கள், வினாத்தாள் வடிவமைப்பு குழுவைச் சோ்ந்த 215 ஆசிரியா்கள், கிளாட் பயிற்சி வழங்கிய 16 ஆசிரியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள், நோ்முக உதவியாளா்கள், அலுவலா்கள் 30 போ் உள்பட மொத்தம் 2,408 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.
மேலும், 2024-2025-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவிகள், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகையை தனிப்பட்ட முறையில் அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வரவேற்றாா். மாவட்டக்கல்வி அலுவலா் (இடைநிலை) சே. மாரிமுத்து நன்றி கூறினாா்.