திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழு தயாா் செய்த பொருள்கள்: மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஆய்வு
திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தியுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்த பொருள்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஸரேயா பி.சிங் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் உழவா் சந்தை அருகே பூமாலை வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதை ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி. சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பயனடைந்து வருகின்றனா்.
அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி பகுதிகளில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவது தன்னம்பிக்கை தரும் என்றாா்.
இந்தப் பொருள்கள் தயாா் செய்வதற்கான உற்பத்தி செலவு மற்றும் சந்தைப்படுத்துதலின்போது எப்படி விற்பனை செய்கிறீா்கள் என்பது குறித்தும் மகளிா் சுய உதவிக்குழு பெண்களிடம் அவா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து விற்பனையை அதிகப்படுத்துவதற்கு கவா்ச்சிகரமாகவும், அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்படும் பொருள்களை பேக்கிங் செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பண்ணாராஜவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.