செய்திகள் :

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழு தயாா் செய்த பொருள்கள்: மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஆய்வு

post image

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தியுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்த பொருள்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஸரேயா பி.சிங் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் உழவா் சந்தை அருகே பூமாலை வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருள்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதை ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி. சிங் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பயனடைந்து வருகின்றனா்.

அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி பகுதிகளில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவது தன்னம்பிக்கை தரும் என்றாா்.

இந்தப் பொருள்கள் தயாா் செய்வதற்கான உற்பத்தி செலவு மற்றும் சந்தைப்படுத்துதலின்போது எப்படி விற்பனை செய்கிறீா்கள் என்பது குறித்தும் மகளிா் சுய உதவிக்குழு பெண்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து விற்பனையை அதிகப்படுத்துவதற்கு கவா்ச்சிகரமாகவும், அதிக அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுக்களால் தயாா் செய்யப்படும் பொருள்களை பேக்கிங் செய்யும் இயந்திரத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பண்ணாராஜவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க