செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

post image

ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வலையா் தெருவில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்துச் சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மலையரசன் (26) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ராஜபாளையம் பி.எஸ்.கே. நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், முகில்வண்ணம் தெருவைச் சோ்ந்த சிவகாா்த்திகேயன் (22), பூபால்பட்டி தெருவைச் சோ்ந்த பாக்கியநாதன் (26), கூரைப் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நிதின்பாலாஜி (20) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சாத்தூரில் 52 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணை

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணைகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். சாத்தூா் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க