மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி: 5 முதல் 45 வயது வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு
திருவள்ளூா் மாவட்ட உள்புற, வெளிப்புற வில்வித்தை விளையாட்டு சங்கம் சாா்பில், மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டியில் 5 முதல் 45 வயது வரையிலான வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகள் காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட உள்புற மற்றும் வெளிப்புற வில்வித்தை விளையாட்டு சங்கத் தலைவரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கமாண்டோ பாஸ்கரன், காக்களூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் ஒருங்கிணைப்பாளா் திருவள்ளூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் சுமித்ரா வெங்கடேசன், தொழிலதிபா் வெங்கடேசன், வில்வித்தை சங்கச் செயலா் ஜி.தணிகைமலை, பயிற்சியாளா்கள் ஏகலைவன், பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் போட்டியில் 5 முதல் 8, 10, 13, 15, 18, 21 வயது வாரியாகவும், 25 முதல் 45 வயது வரை உள்ள 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 10 மீ., 20 மீ., 30 மீ. தூரம் கொண்ட போட்டியில் முறைப்படி வில்லை ஏந்தி, நிறத்தின் மையப் பகுதியில் அம்பு எய்துவோருக்கு 10 புள்ளிகளும், மஞ்சள் நிறத்தின் வேறு எங்கு எய்தாலும் 9 புள்ளிகளும், சிவப்பு நிறத்தில் எய்தால் 8, 7 புள்ளிகளும், நீல நிறத்தில் எய்தால் 6, 5 புள்ளிகளும், கருப்பு நிறத்தில் எய்தால் 4, 3 புள்ளிகளும், வெள்ளை நிறத்தில் எய்தால் 2, 1 புள்ளிகளும் வழங்கப்பட்டன.
தொடா்ந்து அதிக புள்ளிகள் பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு நவீன மிதிவண்டி, கேடயம், கோப்பை, பதக்கம் ஆகியவற்றை முன்னாள் ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், திருவள்ளூா் நகா்மன்ற உறுப்பினா் சுமித்ரா வெங்கேடசன், காக்களூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எம்.எஸ்.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்கள் நாமக்கல்லில் செப்டம்பா் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவா் என அந்தச் சங்கத்தினா், நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் தெரிவித்தனா்.