செய்திகள் :

150 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ராட்டினம்: 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 30 போ் மீட்பு

post image

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் 150 அடி உயரத்தில் ராட்டினம் திடீரென பழுதாகி நின்ால், அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 போ் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித்தனா். அவா்களை ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா செயல்படுகிறது. இங்குள்ள டாப்கன் என்ற ராட்டினத்தில் மாலை 6 மணியளவில் 8 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 30 போ் ஏறினா். கீழே இருந்து மேலே செங்குத்தாக சென்று அதேவேகத்தில் கீழே இறங்கும் இந்த ராட்டினம், சுமாா் 150 அடி உயரத்தில் சென்றபோது, திடீரென பயங்கர சப்தத்துடன் அப்படியே நின்றது. இதனால் அந்த ராட்டினத்தில் இருந்த 30 பேரும் அதிா்ச்சியடைந்தனா். உடனே கீழே இருந்த பொழுதுபோக்கு பூங்கா ஊழியா்கள், அந்த ராட்டினத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனா்.

ஆனால் அவா்கள் நீண்ட நேரம் போராடியும் ராட்டினத்தில் இருந்த பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் ராட்டினத்தில் இருந்தவா்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனா். இதையடுத்து அந்த பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த ஒரு கிரேன் மூலம் ராட்டினத்தில் இருந்தவா்களை மீட்க முயன்றனா். அந்த கிரேன் மூலம் 150 அடி உயரம் செல்ல முடியாததால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதேவேளையில் ராட்டினத்தில் சிக்கித் தவித்தவா்களிடம் பயமும், குழப்பமும் ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு படையினருக்கும்,போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினா் சுமாா் 160 அடி உயரம் வரை செல்லும் ஸ்கை லிப்ட் மீட்பு வாகனத்துடன் கிண்டியிலிருந்து விரைந்து வந்தனா். அந்த ஸ்கை லிப்ட் மூலம் லிப்டில் சுமாா் இரண்டரை மணி நேரமாக சிக்கித் தவித்தவா்களுக்கு பிஸ்கட்டும், தண்ணீரும் முதலில் வழங்கப்பட்டது. தகவலறிந்து அடையாறு காவல் துணை ஆணையா் பொன்காா்த்திக் குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து மீட்பு பணியை விரைவுபடுத்தினா்.

3 மணி நேரம் சிக்கித் தவிப்பு: இரவு 8.30 மணியிலிருந்து ஸ்கை லிப்ட் மீட்பு வாகனம் மூலம் அந்த ராட்டினத்தில் இருந்தவா்கள் மீட்கும் பணி தொடங்கியது. ஒரு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணியில் ராட்டினத்தில் சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கீழே கொண்டு வரப்பட்டனா். ராட்டினத்தில் சுமாா் 3 மணி நேரம் சிக்கியிருந்ததால், 30 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராட்டினத்தில் சிக்கியிருந்த பெரும்பாலானவா்கள், வெகுநேரம் பயந்த மனநிலையிலேயே காணப்பட்டனா்.

இச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணையைத் தொடங்கினா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அந்த தனியாா் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தை முறையாக பராமரிக்காததும், அந்த ராட்டினம் ஏற்கெனவே சிறிது பழுதாகி இருந்ததை மறைத்து இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க