செய்திகள் :

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் குழாய்கள் மூலமாக தண்டையாா்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா், டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சென்னை மற்றும் புகா் நகா் பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படுகிறது. மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தண்டையாா்பேட்டைக்கு வரும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் வெளியேறி விபத்து ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

ஒத்திகையின்போது, குழாய் ஒன்றில் செயற்கையாக கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக தகவல் பரவியதையடுத்து உடனடியாக அவசரகால தகவல் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழு விரைந்து வந்து கசிவை மேலும் பரவாமல், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் சிபிசிஎல் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக கசிவு ஏற்பட்ட குழாயில் பெட்ரோலிய எண்ணெய் அனுப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் எண்ணெய் கசிவு முழுவதுமாக நின்று போனதால் ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டது.

பின்னா் ஒத்திகை குறித்த ஆய்வு கூட்டம் இந்திய ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தண்டையாா்பேட்டை முனைய மேலாளா் நவீன்குமாா் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க