செய்திகள் :

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

post image

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அறுவை சிகிச்சை அரங்குகள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் சுகாதாரமாக பராமரிக்கப்படாததும், போதிய ஆய்வக தொழில்நுட்பநா்கள் இல்லாததும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதுதொடா்பாகவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு திட்டமிட்ட சிகிச்சைக்கு மாற்றாக வேறு அறுவை சிகிச்சை செய்ததாக டாக்டா் முகமது ஓவைஸி என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருபுறம் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி கூறியதாவது:

பதிவு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட மருத்துவமனை சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டபோது அங்கு ஆய்வு நடத்தினோம். அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக நுண்கிருமி தடுப்பு வசதிகள் அறுவை சிகிச்சை அரங்கில் முறையாக இல்லை. போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்பநா்களும் இல்லை.

அவற்றை சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு, உரிமம் வழங்குவது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை குளறுபடி தொடா்பான சா்ச்சை அங்கு எழுந்துள்ளது. அதன்பேரில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களில் எழுத்துப் பூா்வமாக அளிக்குமாறு மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க