செய்திகள் :

திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்

post image

திருநங்கைகள் நலனை மேம்படுத்தவும், அவா்கள் சுயகௌரவத்துடன் வாழவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி, தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியத்தை 2008-இல் தொடங்கி, அவா்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நல வாரியம்: ‘அரவாணிகள்’ எனும் பெயரை ‘திருநங்கையா்’ எனவும் மாற்றி அறிவித்தாா். இதையடுத்து, அரவாணிகள் நலவாரியம் ‘திருநங்கையா் நலவாரியம்’ என அழைக்கப்படுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநங்கையா் நலவாரியத்தை 15 அலுவல்சாா் உறுப்பினா்கள், 13 அலுவல் சாரா உறுப்பினா்களுடன் திருத்தியமைத்தாா். திருநங்கைகள் நலவாரியம் மூலமாக, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப் பட்டா, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்க மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதுக்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஓய்வூதியம்: வருவாய் ஈட்ட இயலாத 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்ததை, முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.1,500-ஆக உயா்த்தி உத்திரவிட்டாா்.

இத்திட்டத்தின் கீழ், 2022-23-ஆம் நிதியாண்டுக்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-24-இல் 1,482 திருநங்கைகளுக்கு ரூ.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2025-26-இல் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று இரண்டாம் அலை அச்சுறுத்தல் காலத்தில், திருநங்கைகள் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டை பெற்ற குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு ரூ.3.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி திருநங்கைகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவா்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

தொழில் தொடங்க மானியம்: திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயா்த்தி, சமூகத்தில் அவா்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கத்துடன், அவா்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை 811 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனா்.

கல்விக் கட்டணத் தொகை: திருநங்கைகளும் மற்றவா்களைப் போன்றே சமமாக உயா்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெறுவதற்காக, 2024-25 முதல் உயா்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்பட அனைத்துச் செலவினங்களுக்காக, 2024-25-க்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

திருநங்கையா் சமுதாயமும் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வரப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சத ராட்டினத்தில் கோளாறு! 3 மணிநேரத்திற்கு மேல் அந்தரத்தில் தவிக்கும் மக்கள்!

சென்னையில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரத்திற்கு மேலாக குழந்தைகள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவித்து வருகின்றனர்.சென்னை கிழ... மேலும் பார்க்க

பொறுமைக் கடலினும் பெரிது: மாநிலங்களவை சீட் குறித்து பிரேமலதா!

பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சென்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு உயரிய விருது!

போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு - 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது வழங்கப்பட்டது.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:புது டெல்லியில் உள்ள Rose... மேலும் பார்க்க

உடற்கல்வி பாடவேளைக்கு முக்கியத்துவம்: அன்பில் மகேஸ்

உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுற... மேலும் பார்க்க

'பாசிச ஆட்சி' - தவெக பெண் நிர்வாகிகளைத் தாக்கிய காவல் துறைக்கு விஜய் கடும் கண்டனம்!

சென்னை வியாசர்பாடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்ற தவெக பெண் நிர்வாகிகளை காவல் துறையினர் தாக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடி ... மேலும் பார்க்க