செய்திகள் :

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு உயரிய விருது!

post image

போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு - 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation - GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான "உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்" என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா, இந்த விருதினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், உடன் இருந்தனர்.

இந்த உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி, அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் மிகச்சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குழுக்களை கௌரவிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், வளப் பாதுகாப்பு, சூரியமின்சக்தி பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான பசுமையான தோட்டங்களை வளர்த்து சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது.

இந்த விருதை பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: உடற்கல்வி பாடவேளைக்கு முக்கியத்துவம்: அன்பில் மகேஸ்

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் மே 30-இல் வெளியீடு

தமிழகத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்ட... மேலும் பார்க்க