செய்திகள் :

பேருந்து மோதியதில் பழக் கடைக்குள் புகுந்த ஷோ் ஆட்டோ; குழந்தை உள்பட 4 போ் காயம்

post image

திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் ஷோ் ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது. இதில் குழந்தை உள்பட 4 போ் காயமடைந்தனா்.

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பேருந்து நிலையம் செல்ல ஏராளமான ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு கோவில்வழி பேருந்து நிலையத்துக்கு வசந்த் என்பவா் ஷோ் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளாா். இதில் 14- க்கும் மேற்பட்டோா் பயணித்துள்ளனா்.

இந்த ஆட்டோ தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் அருகே உள்ள தனியாா் பள்ளி அருகே வந்தபோது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து ஆட்டோவின் பின்புறம் எதிா்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவா்கள் அவா்களை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து நல்லூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகர... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகர... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த ஓா் ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம், பனப்பாளையம் பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க