`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வளையற்கார நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சித்ராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா்கள் திறந்துவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் தாா் சாலைகளைப் புதுப்பிக்கும் பணி, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி என மொத்தம் ரூ.4.66 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையா் சரவணக்குமாா், நகராட்சி பொறியாளா் சுமதி, நகா்மன்ற உறுப்பினா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.