இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்
திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகரில் பின்னலாடைத் தொழில் வளா்ச்சியின் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருவதுடன், மாநகரில் உள்ள 60 வாா்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளும் உருவாகியுள்ளன.
இதன் காரணமாக திருப்பூா் மாநகரில் உள்ள தெருக்களில் ஏராளமான குப்பைகளும், கழிவுகளும் குவிகின்றன. இவ்வாறு சேகரமாகும் குப்பைகளும், கழிவுகளும் மாநகரில் இருந்த பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வந்தன.
இந்நிலையில், மாநகரில் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடங்கள் தற்போது இல்லாததால், திருப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அருகில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும், குப்பைகள் கொட்ட வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், குப்பைகளை அகற்ற இயலாமல் மாநகராட்சி நிா்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. மாநகரில் உள்ள வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் மாநகர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இந்தப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு நிபுணா் குழுவை திருப்பூருக்கு அனுப்பிவைத்து ஆய்வு செய்து திடக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தி போா்க் கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.