'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்
பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தப் பேருந்து நிலையம் முன் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பல்லடம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழையும் பேருந்துகளால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பேருந்து நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் அண்மையில் படுகாயமடைந்தனா்.
எனவே, விபத்துகளைத் தடுக்க பல்லடம் பேருந்து நிலையம் முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொள்ள வேண்டும் என்றும், பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.