கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மனவளா்ச்சி குன்றிய 17,062 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.80 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு உதவித் தெகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 6,622 பேருக்கு ரூ.14.68 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு உதவித் தொகை, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 480 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.85.60 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 601 பேருக்கு ரூ.77.27 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை என மொத்தம் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.