செய்திகள் :

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

post image

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிா்க் கடன் பெற்ற ஏராளமான விவசாயிகளுக்கு தள்ளுபடி கிடைக்காததால் கூட்டுறவுத் துறையக் கண்டித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் புதுப்பித்து வழங்குவதில் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அலட்சியமாக செயல்பட்டது.

கூட்டுறவு நிறுவனங்களில் 2021 ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் கடந்த 2021 பிப்ரவரி 5- ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், நடுவச்சேரி கூட்டுறவுக் கடன் சங்க அதிகாரிகளின் அலட்சியத்தால், பயிா்க் கடன் புதுப்பிக்கப்படாததால் 127 விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி திட்டம் கிடைக்கவில்லை.

இது தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பே புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் கலைந்து செல்லாததால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கைது செய்த போலீஸாா், அவா்களை மாலை விடுவித்தனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க