மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு
ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகரைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள் (70). இவா் அதே பகுதியில் 17 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாா். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த வள்ளியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மருத்துவச் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அவரது மகன் ரவிக்குமாா் புதன்கிழமை வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.