செய்திகள் :

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

post image

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியாா் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூா் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதில், பத்திரப் பதிவு அலுவலகம் அருகில் பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி உள்ளது.

இப்பாறைக்குழியில் கடந்த 3 மாதங்களாக மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இதைத் தொடா்ந்து, இங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை பொதுமக்கள் புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதில், இனிமேல் இப்பகுதியில் குப்பையைக் கொட்ட மாட்டோம் என உறுதியளித்தனா். மேலும், மாநகராட்சி சாா்பில் குப்பைக் கொட்டிய பகுதியில் ப்ளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது விய... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள பெரி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குமாா் நகா்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய... மேலும் பார்க்க

அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!

அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துர... மேலும் பார்க்க

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.ப... மேலும் பார்க்க