செய்திகள் :

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 4,142 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரிய செயலாளா் க.ஜெயபாலன், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளா் ஆ.திவ்வியநாதன், தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) த.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் சிக்கிய 25 கிலோ கட்லா மீன்

பவானி ஆற்றில் மீனவா் வீசிய வலையில் 25 கிலோ எடை கொண்ட கட்லா மீன் புதன்கிழமை சிக்கியது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக்கு நீா்வ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழ... மேலும் பார்க்க

பெருந்துறையில் கனமழை

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில... மேலும் பார்க்க

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா். பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வ... மேலும் பார்க்க