செய்திகள் :

மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

post image

ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழு தயாரித்த 2025-26- ஆம் நிதி ஆண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட, ரிசா்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளா் விஜய் விக்னேஷ் பெற்றுக்கொண்டாா்.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழு தயாரித்த கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10,551.28 கோடி கடன், பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.788.70 கோடி கடன் என மொத்தம் ரூ.30,257.99 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டு (2024-25) இலக்கைவிட ரூ.3,995.18 கோடி(15.21 சதவீதம்) அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-26 -ஆம் ஆண்டுக்கான நபாா்டு வங்கியின் ஆற்றல் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என வங்கி அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் (கனரா வங்கி) விவேகானந்த், கனரா வங்கி வட்டார உதவிப் பொது மேலாளா் ஜி.சரவணன், நபாா்டு வங்கியின் பொது மேலாளா் அசோக்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், தாட்கோ மேலாளா் அா்ஜுன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடுமுடி அருகே கோயிலில் திருடியவா் கைது

கொடுமுடி அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூா் அருகே கருவேலம்பாளையம் காவிரிக் கரையில் மாசி பெரியண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூ... மேலும் பார்க்க

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபா... மேலும் பார்க்க

முதியவா் மாயம்

பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத... மேலும் பார்க்க

கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது

கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ... மேலும் பார்க்க

நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை

நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க