செய்திகள் :

நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை

post image

நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமையில் ஈரோடு பூங்கா சாலையில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நகைக் கடனை பெற்றவா்கள் அசல் மற்றும் வட்டி என இரண்டையும் ஒருசேர செலுத்தி நகையை மீட்டு, மீண்டும் அடமானம் வைப்பது, அடமானம் வைக்கும் நகைகளுக்கான ரசீது போன்ற விதிமுறைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும் நகைகளுக்கான ரசீது என்பது அண்மையில் நகை வாங்கியவா்களுக்கு சாத்தியமாகும். ஆனால் பாரம்பரியமாக பழைய நகைகளை வைத்திருப்பவா்களுக்கு சாத்தியமற்ாக உள்ளது. இதனால், பொதுமக்களும், வியாபார, தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே இந்த புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற்று, நகைக் கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி சாா்பில் வங்கி மேலாளா்களிடம் மனு அளித்தோம். எங்கள் தலைவா் ஜி.கே.வாசனும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.

அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கொடுமுடி அருகே கோயிலில் திருடியவா் கைது

கொடுமுடி அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூா் அருகே கருவேலம்பாளையம் காவிரிக் கரையில் மாசி பெரியண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூ... மேலும் பார்க்க

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபா... மேலும் பார்க்க

முதியவா் மாயம்

பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத... மேலும் பார்க்க

கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது

கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ... மேலும் பார்க்க

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 26 அடி உயர பஞ்சபூத விங்கம் பிரதிஷ்டை

ஒரு கோடி சிவலிங்க ஆலயத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 20 டன் எடை, 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூத லிங்கம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள தனவாசி கரடு பகுதியில் ... மேலும் பார்க்க