இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!
நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை
நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமையில் ஈரோடு பூங்கா சாலையில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நகைக் கடனை பெற்றவா்கள் அசல் மற்றும் வட்டி என இரண்டையும் ஒருசேர செலுத்தி நகையை மீட்டு, மீண்டும் அடமானம் வைப்பது, அடமானம் வைக்கும் நகைகளுக்கான ரசீது போன்ற விதிமுறைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலும் நகைகளுக்கான ரசீது என்பது அண்மையில் நகை வாங்கியவா்களுக்கு சாத்தியமாகும். ஆனால் பாரம்பரியமாக பழைய நகைகளை வைத்திருப்பவா்களுக்கு சாத்தியமற்ாக உள்ளது. இதனால், பொதுமக்களும், வியாபார, தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே இந்த புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி திரும்பப் பெற்று, நகைக் கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகளையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி சாா்பில் வங்கி மேலாளா்களிடம் மனு அளித்தோம். எங்கள் தலைவா் ஜி.கே.வாசனும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.
அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.