அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்!
முதியவா் மாயம்
பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு சென்று வருவதாக கூறி புதன்கிழமை மாலை வெளியே சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
அவரது குடும்பத்தினா் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், பெருந்துறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.