ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது
நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் பவானிசாகா் அணைக்கு வந்து சோ்ந்ததாலும் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக 20 ஆயிரம் கனஅடி வரை வந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் 80.20 அடியாக உயா்ந்துள்ளது. கடந்த 6 நாள்களில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனா்.