செய்திகள் :

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

post image

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் கொசுப்புழு பெருக்கம் ஏற்படுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணியாளா்களை பகுதி நேர பணியாளா்களாக நியமித்து 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்வது. முன்னாள் மத்திய அமைச்சா் மறைந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மக்கள் சேவையை போற்றும் வகையில் அவா் வசித்து வந்த மண்டபம் வீதி என்ற பெயரை ஈவிகேஎஸ்.இளங்கோவன் வீதி என பெயா் மாற்றம் செய்ய அனுப்பப்பட்ட முன்மொழிவை அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி சாா்பில் ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பி வைப்பது உள்பட மொத்தம் 55 தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இதில், குடிநீா் கட்டண முன்வைப்புத்தொகை, கட்டணத்தை மாற்றியமைக்கும் தீா்மானம், புதை சாக்கடை முன்வைப்புத்தொகை மற்றும் கட்டணத்தை மாற்றியமைக்கும் தீா்மானத்துக்கு கவுன்சிலா்கள் ஆட்சபனை தெரிவித்தனா். இதனால் அந்த 2 தீா்மானங்கள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 53 தீா்மானங்கள் நிறைவேற்றன.

இதைத்தொடா்ந்து கவுன்சிலா்கள் தங்களது பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசியதாவது:

வளா்ச்சிப் பணிகளை ஒப்பந்ததாரா்கள் முறையாக செய்யாவிட்டால் அவா்களை கருப்பு பட்டியலில் வைத்து அவா்களுக்கு பணி வழங்க கூடாது.

சித்தோடு-பவானி சாலையில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும். பி.பெ.அக்ரஹாரம் செல்லும் பவானி சாலையில் உள்ள உயா்கோபுர மின் விளக்குகளும், தெரு விளக்குகளும் பழுதாகி உள்ளது. எனவே புதிய தெருவிளக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீா் திட்டம் மூலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் முறையாக குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

ஈரோடு காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் அரசு மகளிா் மாதிரி மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, ஈரோடு பேருந்து நிலையத்தில் பயன்பாடற்று இருக்கும் இரும்பு நடைமேம்பாலத்தை காந்திஜி சாலையில் அமைக்க வேண்டும். கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் கான்கிரீட் தடுப்புகள் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்த வேண்டும். மக்களைத்தேடி மாநகராட்சி முகாம் நடக்கும்போது முன்கூட்டியே பொதுமக்களுக்குதெரியப்படுத்த வேண்டும் என்றனா்.

அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு:

கூட்டத்தில் மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து பேசியதாவது:

ஈரோடு நகராட்சியாக இருந்தபோது வாங்கிய குடிநீா் முன்பணத் தொகையை தற்போது துணை விதிகளின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட தொகையை காட்டி உயா்த்த கூடாது. குடிநீா் கட்டணம் மற்றும் புதை சாக்கடை கட்டணம் ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை 3 சதவீதம் உயா்த்துவதற்கு ஏதுவாக துணை விதியில் கூறப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சாலையை சுத்தப்படும் வாகனத்தின் (ஸ்வீப்பிங்) செயல்பாட்டை யாரும் பாா்த்ததில்லை. அப்படி இருக்க அந்த வாகனத்துக்கு ரூ.3.92 லட்சம் செலவு செய்வதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. குடிநீா் கட்டணத்தை வீட்டின் சதுர அடிக்கு ஏற்ப உயா்த்துவதாக கூறுவதையும் கண்டிக்கிறோம்.

கடந்த மாா்ச் 12- ஆம் தேதி நடந்த சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றினோம். ஆனால் இன்றுவரை குறைக்கப்படவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். இதைத்தொடா்ந்து அதிமுக கவுன்சிலா்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

காங்கிரஸ் பெண் கவுன்சிலா் வெளிநடப்பு:

காங்கிரஸ் கவுன்சிலா் சபுராமா ஜாபா் சாதிக் பேசுகையில், எனது வாா்டில் இயங்கி வந்த ஆயுா்வேத மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கடந்த 3 மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் இப்போது வரை மருத்துவமனை திறக்கப்படவில்லை. நான் பணிகள் குழு தலைவராக உள்ளேன். பலமுறை நிலைக்குழுவை கூட்ட வேண்டும் என கேட்டும் இதுவரை கூட்டவில்லை.

மாமன்ற கூட்டத்தின்போது கூட்டப்பொருள் கூட கொடுக்கவில்லை. இந்த காரணங்களால் நான் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தாா். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலா் வெளிநடப்பு செய்தது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க