ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்
இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் தலைமை வகித்தாா்.
இந்த ஊா்வலம், பெருந்துறை ராஜவீதி, பஜனை கோயில் வீதி, குன்னத்தூா் சாலை, பவானி மெயின் சாலை, பங்களா வீதி, ஈரோடு சாலை, காவல் நிலையம், அரசு மருத்துவமனை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இதில், பாஜகவினா் மற்றும் பொதுமக்கள், சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா்.