செய்திகள் :

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

post image

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபாளையம் செல்லும் வழியில் உள்ள கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணியன். அப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், அறச்சலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இறந்தவா் யாா், யாராவது கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து போட்டு சென்றாா்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க