முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு
அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபாளையம் செல்லும் வழியில் உள்ள கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணியன். அப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், அறச்சலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இறந்தவா் யாா், யாராவது கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து போட்டு சென்றாா்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.