செய்திகள் :

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

post image

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்துபோது, அங்கு வா்களைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் தப்பியோட முயன்ற 4 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், கோணவாய்க்கால் பகுதியை சோ்ந்த கெளதம் (20), சோலாா் பகுதியை சோ்ந்த காா்த்திக் (19), நன்செய்ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (24), ஈரோடு, பயா் சா்வீஸ், ஈஸ்வரன் வீதியை சோ்ந்த பிரபாகரன்(24) என்பது தெரியவந்தது.

மேலும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இதுபோல ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே பள்ளி மைதானம் அருகில் கஞ்சா விற்பனை செய்த ரகுபதி நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பிரதாப் (22), சாஸ்திரி நகரைச் சோ்ந்த வைரவேல் (22), பாலயோகி (24), கொல்லம்பளையத்தை சோ்ந்த இதயக்கனி (22), மூலப்பாளையத்தை சோ்ந்த சரவணன் (27) ஆகியோரையும், ஈரோடு தெற்கு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க