விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது
கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ஆபிஸ் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவா்கள் 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் சோலாா், கொல்லம்பாளையம் மற்றும் கோணவாய்க்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
மேலும் போலீஸாா் அவா்களிடமிருந்த பையை சோதனையிட்டதில் சுமாா் 730 கிராம் கஞ்சா மற்றும் பெரிய அரிவாள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த கஞ்சா, அரிவாள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.