பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
பெருந்துறையில் கனமழை
பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து, மாலை 4 மணியளவில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது. சுமாா் 1 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.