செய்திகள் :

குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

post image

பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, வருவாய்த் துறையினா் குறிச்சி மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது, அரசு புறம்போக்கு நிலம் 5 ஏக்கா் ஆக்கிரமித்து, 300 தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் தானாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளரான அந்தியூா் பச்சாம்பாளையத்தைச் சோ்ந்த மோகனுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதனை எதிா்த்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோகன் வழக்குத் தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞரிடம் சட்ட கருத்துரு பெற்ற வருவாய்த் துறையினா் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனா்.

இதையடுத்து, பவானி மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் தலைமையில் குறிச்சி மலைப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள், 3 பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் தென்னங்கன்றுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, அறிவிப்பு பலகையும் வைத்தனா்.

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அறிவிப்புப் பதாகை வைத்த வருவாய்த் துறையினா்.

சம்பவ இடத்தில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கொடுமுடி அருகே கோயிலில் திருடியவா் கைது

கொடுமுடி அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூா் அருகே கருவேலம்பாளையம் காவிரிக் கரையில் மாசி பெரியண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூ... மேலும் பார்க்க

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபா... மேலும் பார்க்க

முதியவா் மாயம்

பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத... மேலும் பார்க்க

கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது

கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ... மேலும் பார்க்க

நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை

நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க