குறிச்சி மலைப் பகுதியில் 5 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பவானியை அடுத்த குறிச்சி மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
பவானி வட்டம், குறிச்சி மலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, வருவாய்த் துறையினா் குறிச்சி மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது, அரசு புறம்போக்கு நிலம் 5 ஏக்கா் ஆக்கிரமித்து, 300 தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் தானாக முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளரான அந்தியூா் பச்சாம்பாளையத்தைச் சோ்ந்த மோகனுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதனை எதிா்த்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மோகன் வழக்குத் தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து, பவானி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞரிடம் சட்ட கருத்துரு பெற்ற வருவாய்த் துறையினா் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனா்.
இதையடுத்து, பவானி மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் தலைமையில் குறிச்சி மலைப் பகுதிக்கு புதன்கிழமை சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள், 3 பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் தென்னங்கன்றுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, அறிவிப்பு பலகையும் வைத்தனா்.

சம்பவ இடத்தில் அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.