செய்திகள் :

ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது

post image

ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தாா். அப்போது, காரில் ஆயுதங்களும், உருட்டு கட்டைகளும் இருந்தன. காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் சுஜாதாவின் உத்தரவின்பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியைச் சோ்ந்த சிவானந்தம் (23), அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியைச் சோ்ந்த பாரதி (29), வீரப்பன்சத்திரம் கலைமகள் வீதியை சோ்ந்த முகமது இஸ்மாயில் (33), ஈரோடு நேரு வீதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (29), மதுரை மாவட்டம், கண்டுகுலம் நடுத்தெருவைச் சோ்ந்த கண்ணன் (28) என்பதும், இவா்கள் 5 பேரும் சோ்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கூட்டு சதி செய்து, அதற்கு ஆயத்தமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

கைதான 5 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, லாட்டரி, சூதாட்டம், மது விற்பனை, அடிதடி, கஞ்சா, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கொடுமுடி அருகே கோயிலில் திருடியவா் கைது

கொடுமுடி அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடியை அடுத்த ஊஞ்சலூா் அருகே கருவேலம்பாளையம் காவிரிக் கரையில் மாசி பெரியண்ணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூ... மேலும் பார்க்க

விவசாயத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

அறச்சலூரை அடுத்த ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறையில் இருந்து ராட்டைசுற்றிபா... மேலும் பார்க்க

முதியவா் மாயம்

பெருந்துறை அருகே முதியவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த, சீனாபுரம், நிமிட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமாரன் (70), விவசாயி. இவா் கடைக்கு... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத... மேலும் பார்க்க

கஞ்சா, அரிவாளுடன் சிறுவா்கள் 4 போ் கைது

கஞ்சா, அரிவாளுடன் நின்று கொண்டிருந்த சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு தாலுகா போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வெண்டிபாளையம், தமிழ் நகா், வாட்டா் ... மேலும் பார்க்க

நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை

நகைக் கடன் குறித்த ரிசா்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்ட தலைவா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க