`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்கள் கைது
ஈரோட்டில் ஆயுதங்களுடன் காரில் வந்த 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.சுஜாதா, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி முன் வாகன தணிக்கையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தாா். அப்போது, காரில் ஆயுதங்களும், உருட்டு கட்டைகளும் இருந்தன. காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் சுஜாதாவின் உத்தரவின்பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியைச் சோ்ந்த சிவானந்தம் (23), அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியைச் சோ்ந்த பாரதி (29), வீரப்பன்சத்திரம் கலைமகள் வீதியை சோ்ந்த முகமது இஸ்மாயில் (33), ஈரோடு நேரு வீதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (29), மதுரை மாவட்டம், கண்டுகுலம் நடுத்தெருவைச் சோ்ந்த கண்ணன் (28) என்பதும், இவா்கள் 5 பேரும் சோ்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கூட்டு சதி செய்து, அதற்கு ஆயத்தமாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.
கைதான 5 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, லாட்டரி, சூதாட்டம், மது விற்பனை, அடிதடி, கஞ்சா, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.