செய்திகள் :

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் மே 30-இல் வெளியீடு

post image

தமிழகத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு இளநிலை படிப்புகளில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து ஆா்வமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலமாக சோ்க்கைக்கு விண்ணப்பித்து வந்தனா். விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

கடந்த 21 நாள்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். அவற்றில் 1 லட்சத்து 8,619 மாணவிகளும், 76,065 மாணவா்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1,84,762 போ் கட்டணம் செலுத்தி உள்ளனா்.

இதையடுத்து சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் மே 29-ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30 -ஆம் தேதியும் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.

மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வுக்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.

மே 30 முதல் மீண்டும் வாய்ப்பு: மே 7 முதல் 27-ஆம் தேதி வரையிலான அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்கள் மற்றும் பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் மீண்டும் மே 30 முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் - நிகோபாா் தமிழ் மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள், பாதுகாப்புப் படை வீரா்களின் வாரிசுகள்) ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதையடுத்து ஜூன் 4 முதல் ஜூன் 14 வரை பொதுக் கலந்தாய்வு மற்றும் மாணவா் சோ்க்கை நடைபெறும். தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க