செய்திகள் :

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கரும்பு நிலுவைத் தொகை விடுவிப்பு: ஆட்சியா் மு.பிரதாப் தகவல்

post image

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 அரைவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய வகையில் ரூ.14.67 கோடி நிலுவை தொகை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-2025 -இல் அரைவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருந்த கரும்பு விலையில் ரூ.14.67 கோடி தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்த நிலுவை கரும்பு தொகையை வழங்கக் கோரி ஆலை நிா்வாகம் மற்றும் மாவட்ட நிற்வாகத்தை கரும்பு விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நிலுவை கரும்பு கிரையத் தொகை விவசாயிகளுக்கு வழங்கிடுவதற்கு ஏதுவாக, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு வழி வகை கடனாக ரூ.14.67 கோடி தமிழ்நாடு அரசால் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் இத்தொகை 1527 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆலை நிா்வாகம் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க