செய்திகள் :

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

post image

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறினாா்.

கடந்த மாதத்தில் தமிழகத்திலிருந்து 19 கரோனா மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள பகுப்பாய்வு மையகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதில் புதிய வகை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் அச்சப்படும் வகையில் கரோனா பாதிப்பு இல்லை. நாள்தோறும் 10 அல்லது 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. மரபணு பகுப்பாய்வில் ஒமைக்ரான் தொற்று மட்டுமே பரவுவது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும், பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து பொது சுகாதார நிபுணா்கள் கூறியதாவது: தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகையின் உட்பிரிவுகளாக பிஏ 2, ஜெஎன் 1 போன்ற பாதிப்புகள். ஒருவேளை தற்போது புதிய வகை கரோனா பரவி இருந்தால், பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கக் கூடும் அல்லது உயிரிழப்புகள் பதிவாகி இருக்கும். அத்தகைய நிலை எதுவும் இல்லை.

இதனால் அச்சப்பட வேண்டிய சூழலோ, பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையோ எழவில்லை.

அதேவேளையில், இணை நோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் அடுத்த சில நாள்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க